close
Choose your channels

நயன்தாரா 48 நாட்கள் விரதமிருந்து உண்மையா? தயாரிப்பாளர் தகவல் 

Sunday, March 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் நடித்து முடித்துள்ள ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் கேரக்டரில் நடித்துள்ள நயன்தாரா குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒரு திரைப்படத்தில் பக்தி பரவசத்தை வரவழைக்க கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் கொண்டு வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதே நேரத்தில் அந்த படத்தில் நடிக்கும் கேரக்டர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தால் உண்மையான பக்தி பரவசம் வரும் என்பதை நயன்தாரா மூலம் நான் தெரிந்து கொண்டேன்.

நயன்தாரா இந்த படத்திற்காக மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். 48 நாட்கள் அவர் அம்மனுக்கு விரதம் இருந்தது உண்மைதான். அவருடைய இந்த தொழில் பக்தியை பார்த்து நான் உண்மையிலே ஆச்சரியமடைந்தேன். ’மூக்குத்தி அம்மன் கேரக்டர் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட முழு சிரத்தை என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்று கூறினார்.

மேலும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். 50 நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்த ஆர்ஜே பாலாஜிக்கு தான் பாராட்டு தெரிவிப்பதாகவும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் ஐசரி கணேஷ் மேலும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.