close
Choose your channels

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்இட ஒதுக்கீடு… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!!

Friday, October 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்இட ஒதுக்கீடு… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!!

 

மருத்துவப் படிப்பில் சேர தமிழகத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 7.5% உள்இட ஒதுக்கீட்டுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. முன்னதாக நீட் தேர்வு குறித்த விவாதம் தமிழகத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்இட ஒதுக்கீடு வழங்கும் முறையை தமிழக அரசு அமல்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணர்வகளின் நிலைமையைக் குறித்து முன்னதாகத் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கையையும் வைத்திருந்தது. ஆனால் சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில் தற்போதைய ஆளும் அதிமுக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் உள்இட ஒதுக்கீட்டுக்கான அமைச்சரவை சட்ட மசோதாவை கொண்டு வந்தது. இந்த மாசோதாவிற்கு ஒப்புதலை வழங்குமாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களிடம் கோரிக்கையையும் தமிழக அரசு வைத்திருந்தது.

ஆனால் கவர்னர் உள்இட ஒதுக்கீடு குறித்த மசோதாவில் இறுதி முடிவு எதையும் எடுக்காத நிலையில் அதிமுக அமைச்சர்கள் கவர்னரைச் சந்தித்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் உள்இட ஒதுக்கீட்டு நடைமுறையை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்த ஆண்டு முதலே மருத்துவப் பட்டப்படிப்பை பயில 7.5% உள்இட ஒதுக்கீட்டை பெறமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்கு பொது மக்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.