close
Choose your channels

பழையென கழிந்தே தீர வேண்டும்: கமல் கூறுவது யாரை?

Saturday, August 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டுவிட்டரிலும் சரி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரி கமல் கூறும் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ள நீண்ட நேரம் யோசிக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழ்ப்பற்றில் ஊறித்திளைத்த கமல், சுத்தத்தமிழில் சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு பொருத்தமாக கூறும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் அனுபவித்து ரசிக்க கூடிய அளவில் இருக்கும் என்பது தமிழ் பற்றாளர்களுக்கு தெரியும்.

இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் புரமோ வீடியோவில், 'பழையென கழிந்தே தீர வேண்டும், புதுயென புகுந்தே ஆக வேண்டும் என்றும், புதியன புதுமை சேர்க்குமா? வளமை கூட்டுமா? என்ற கேள்விக்குறியுடன் முடித்துள்ளார்.

இன்று கழியும் பழையன எது என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஆனால் அவர் கூறியபடி புதியன வளமை சேர்க்குமா? என்பது சந்தேகம்தான். பிரபலம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் சேனல் நிர்வாகிகள் அனுப்பி வைக்கும் பங்கேற்பாளர்களால் எப்படி வளமை சேரும் என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.