close
Choose your channels

ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் ஃபினாலே: பார்வையாளராக ஆரி மனைவி!

Sunday, January 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்றைய ஆறு மணி நேர ஃபினாலே நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடைபெறும் என்றும் இறுதியில் டைட்டில் வின்னர் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரமோவில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் ஃபினாலே நிகழ்ச்சியின் முன்னோட்டம் ஒளிபரப்பானது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி ஆரியின் மனைவி உள்பட மற்ற போட்டியாளர்களை குடும்பத்தினர்களும் பார்வையாளர்களாக வருகை தந்துள்ளனர். இந்த ஃபினாலேவில் தகுதி பெற்ற 5 போட்டியாளர்களும் ஆடம்பர உடையில் மிகவும் அட்டகாசமாக காட்சி அளிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி எவிக்ட்டான போட்டியாளர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. குறிப்பாக ஆஜித், சம்யுக்தா, அர்ச்சனா உள்ளிட்டோர்கள் ஆட்டம் அட்டகாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் இன்றைய ஆறு மணி நேர நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு செமவிருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.