close
Choose your channels

கடந்த 10 நாட்களில் குறைவான கொரோனா பாதிப்பு: மீண்டு வரும் தமிழகம்

Thursday, May 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 700க்கும் மேற்பட்டோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுத்திய நிலையில் நேற்று 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் நேற்றைவிட இன்று மேலும் கொரோனாவின் பாதிப்பு குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9674ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 447 பேர்களில் 363 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆக 5625ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் இன்று கொரோனாவில் இருந்து 64 பேர்கள் குணமாகியுள்ளதால் தமிழகத்தில் மொத்தம் 2240 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள்னர். அதேபோல் இன்று மட்டும் தமிழகத்தில் 11,956 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் கொரோனாவால் 2 பேர் பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos