close
Choose your channels

வெளிநாட்டு போலீசாரால் கைது செய்யப்படும் த்ரிஷா!

Wednesday, May 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷாவை வெளிநாட்டு போலீசார் கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம் 'ராங்கி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்காக சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை த்ரிஷா நடிப்பில் 'எங்கேயும் எப்போதும்' இயக்குனர் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா 'ராங்கி' என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்தது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் 'ராங்கி' பர்ஸ்ட்லுக் வெளியானது. இதில் இரண்டு வெளிநாட்டு போலீசார் த்ரிஷாவின் கையில் விலங்கு மாட்டுவது போல் உள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் கதையில், சத்யா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.