close
Choose your channels

பாதி பணியை முடித்துவிட்டார் சூர்யா: விக்னேஷ் சிவன் தகவல்

Tuesday, November 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு ஒரே ஒரு பாடலை தவிர அனைத்தும் முடிந்துவிட்டது. கீர்த்தி சுரேஷ் வேறொரு படத்திற்காக வெளிநாட்டு படப்பிடிப்பில் இருப்பதால் அவர் வந்தவுடன் அந்த பாடலின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சூர்யாவும் தனது பகுதிக்கான டப்பிங் பணியை தொடங்கிவிட்டார். நேற்றுடன் அவர் முதல் பாதிக்கான டப்பிங்கை முடித்துவிட்டதாகவும், இன்று முதல் அவர் இரண்டாம் பாதிக்கான டப்பிங்கை தொடர்வார் என்றும் இயக்குனர் விக்னேஷ்சிவன் தனது சமூக வலைத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார். வரும் பொங்கல் அன்று திரைக்கு வர அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் சூர்யாவின் ரசிகரளுக்கு செம பொங்கல் விருந்து காத்திருக்கின்றது.

சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் கார்த்திக் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றை ஏற்று நடித்து வருகிறார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான 'சொடக்கு' பாடல் சூப்பர் ஹிட் ஆன நிலையில் மிக விரைவில் டீசர் மற்றும் பாடல்களை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.