close
Choose your channels

தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற டிவி சீரியல் நடிகை: அதிர்ச்சி தகவல்

Monday, June 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற டிவி சீரியல் நடிகை பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகைகள் மன அழுத்தம் காரணமாகவும் பல்வேறு காரணங்களாலும் தற்கொலைக்கு முயன்று வருகின்றனர் என்று பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த டிவி சீரியல் நடிகை ராய் டெப்லினா டே என்பவர் தனது வீட்டில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்கொலைக்கு முன்னர் அவர் தனது குடும்பத்தினரை குறைகூறி பேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றை பதிவு செய்ததாகவும் ஆனால் திடீரென மனம் மாறிய அந்த ஸ்டேட்டஸை அவர் டெலிட் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த ஸ்டேட்டஸை பார்த்து அவரது நண்பர் உடனடியாக அவரை காப்பாற்ற அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததாகவும், உறவினர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது போன் சுவிட்ச் ஆப் இல் இருந்தது என்று கூறப்படுகிறது.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வந்த நிலையில் காவல்துறையினர் நடிகை ராய் டெப்லினா டே வீட்டுக்கு சென்றபோது அவர் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் தனது குடும்பத்தினர் மீது புகார் கூறியதால் போலீசார் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos