close
Choose your channels

ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா 2 கமர்ஷியல் இயக்குனர்களின் படங்கள்.. ரசிகர்களுக்கு குஷி..!

Tuesday, March 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் 2 வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது சினிமா ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் கலர்ஃபுல்லான கமர்ஷியல் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்களின் ஒருவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகிய நிலையிலும் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் மற்றொரு அதிரடி கமர்ஷியல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ’ரத்னம்’ படமும் அதே ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’ரத்னம்’ படத்தில் விஷால், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதேபோல் அரண்மனை 4’ படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷிகண்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரண்டு படங்களிலும் யோகிபாபு நடித்துள்ளார்.

இந்த நிலையில் இரண்டு படங்களுமே கமர்சியல் இயக்குனர்களின் படம் என்பதால் இரண்டுமே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.