close
Choose your channels

அடுத்தடுத்த நாட்களில் இரண்டு திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்: அதிர்ச்சியில் தொண்டர்கள்

Friday, February 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருவொற்றியூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் கேபிபி சாமி அவர்கள் நேற்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த செய்தி திமுக தொண்டர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது. திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கேபிபி சாமி அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கேபிபி சாமி அவர்களின் மறைவின் சோகத்திலிருந்து இன்னும் திமுக தொண்டர்கள் மீளாத நிலையில், சற்று முன்னர் வெளிவந்த தகவலின்படி குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் அவர்கள் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்திகள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. குறிப்பாக திமுக தொண்டர்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ காத்தவராயன் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் தான் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார் என்பதும் பதவியேற்ற ஒன்பது மாதங்களில் அவர் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்த நாட்களில் இரண்டு திமுக எம்எல்ஏக்கள் உடல்நலக்குறைவால் காலமாகி இருப்பது திமுக தலைவர் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் விரைவில் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.