close
Choose your channels

காதல் தோல்வியால் கடலில் மூழ்கி தற்கொலை முயற்சி: உயிரை பணயம் வைத்த இரண்டு காவலர்கள்!

Wednesday, December 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காதல் தோல்வியால் கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயன்ற வாலிபர் ஒருவரை இரண்டு காவலர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சம்பவம் சென்னையில் நடைபெற்று உள்ளது.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென கடலுக்குள் மூழ்க முயற்சித்ததை பார்த்தவுடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சபின் மற்றும் ராஜா ஆகிய இரண்டு காவலர்கள் உடனடியாக கடலுக்குள் நீந்தி சென்று தங்கள் உயிரையே பணயம் வைத்து அந்த வாலிபரை கரைக்கு கொண்டு வந்தனர்

இதனை அடுத்து அந்த வாலிபரிடம் நடந்த விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் ரேலங்கி பணீந்திரகுமார் என்பதும் தெரியவந்தது. சென்னையில் வேலை செய்யும் பெண்ணை அவர் உயிருக்குயிராக காதலித்து வந்ததாகவும் காதல் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த ரேலங்கி பணீந்திரகுமார் கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் தெரியவந்தது

இதனை அடுத்து தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தற்கொலைக்கு முயன்ற நபரை கடலுக்குள் சென்று நீந்தி அவரது உயிரை காப்பாற்றிய காவலர்களை சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் அவர்கள் பாராட்டியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.