close
Choose your channels

நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் வடிவேலுவுக்கு உத்தரவு

Friday, November 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் மற்றும் சரத்குமார் அணிகள் மோதின. இந்த தேர்தலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு, விஷால் அணிக்கு ஆதரவு கொடுத்தார்.

தேர்தல் சமயத்தில் பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டியளித்தபோது, தனது படத்தின் நகைச்சுவை காட்சியான 'கிணத்தை காணோம்' என்பது போன்று 'நடிகர் சங்கத்தை காணோம்' என்று கூறினார். இது சரத்குமார் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வடிவேலு மீது ராஜேந்திரன் என்பவர், நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ள நிலையில் நடிகர் வடிவேலு வரும் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.