close
Choose your channels

இயக்குனர் சிகரத்திற்கு சிலை எடுக்கும் பிரபல கவிஞர்

Monday, June 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பள்ளியில் இருந்து வந்தவர்கள் தான் இன்று முன்னணியில் இருக்கும் பல நட்சத்திரங்கள். கமல், ரஜினி, விவேக், பிரகாஷ்ராஜ், உள்பட பலருக்கு இன்னமும் அவர்தான் மானசீக குரு
இந்த நிலையில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பல படங்களுக்கு பாட்டெழுதிய கவியரசு வைரமுத்து அவருக்காக சிலை வைக்க திட்டமிட்டுள்ளார். பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசுவாமியின் அனுமதியுடன் இந்த சிலையை பாலசந்தர் சிறுவயதில் வாழ்ந்த திருவாரூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் வைக்கப்படவுள்ளது.
வரும் ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் இந்த சிலை திறப்பு விழாவில் கமல், ரஜினி, விவேக், பாரதிராஜா, மணிரத்னம் உள்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக வைரமுத்துப் பேரவை நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.