close
Choose your channels

அக்ரிமெண்ட்டை என் வக்கீல் பார்த்து கொள்வார்: பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா?

Wednesday, February 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வனிதா வெளியேறி விட்டதாகவும், அக்ரிமெண்ட் இருக்கிறது அவ்வாறு வெளியேறக் கூடாது என்கிறது பிக்பாஸ் கூறியபோது ’அக்ரிமெண்ட்டை எல்லாம் என் வக்கீல் பார்த்துக்கொள்வார்’ என்று வனிதா கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதுவரை சுரேஷ், சுஜா, ஷாரிக் மற்றும் அபினய் ஆகிய 4 பேர் எவிக்சன் செய்யப்பட்டுள்ளனர் .

இந்த நிலையில் நேற்று திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. வனிதா கடந்த வாரம் கேப்டனாக இருந்தபோது அவருக்கு ஆதரவு அளிப்பதாக ஆரம்பத்தில் கூறிய போட்டியாளர்கள் திடீரென அவருக்கு எதிராக திரும்பி கமல்ஹாசனிடம் அவரைப் பற்றி குற்றம் குறை கூறினார்கள்.

அதேபோல் பிராங்க் டாஸ்க்கில் பாலாஜி முருகதாஸ் வனிதாவை கடுப்பேத்தியதோடு பிக் பாஸ் மற்றும் கமலஹாசனும் சேர்ந்து ஒரு பிராங்கை நடத்தி வனிதாவை மேலும் கடுப்பாக்கினர். அதுமட்டுமின்றி இந்த வாரம் நடந்த அரக்கர்கள் மற்றும் தேவதைகள் டாஸ்க்கில் கலந்து கொள்ள முடியாது என திடீரென பாதியில் வனிதா வெளியேறிவிட்டார் .

தனக்கு மன உளைச்சல் இருப்பதாகவும் அதனால் தன்னால் இனிமேல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர முடியாது என்றும் வனிதா கூறியதாகவும், நீங்கள் நினைத்த போதெல்லாம் வெளியேற முடியாது, அக்ரிமென்ட் இருக்கிறது என்று பிக்பாஸ் கூறிய போது அந்த அக்ரிமென்ட்டை எல்லாம் என் வக்கீல் பார்த்துக்கொள்வார் என்று வனிதா பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.