close
Choose your channels

அவங்க வேலையே குலைக்கிறதுதான்: வரலட்சுமி ஆவேசம்

Monday, March 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை வரலட்சுமி அவர்கள் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு போல்டாக பதிலளித்தார். அதில் ராதிகா குறித்த ஒரு கேள்விக்கு ’ராதிகாவை ஏன் நான் ஆன்ட்டி என கூப்பிடுகிறேன், அம்மா என்று ஏன் கூப்பிடவில்லை என்றும் டுவிட்டரில் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனெனில் ராதிகா என்னுடைய அம்மா இல்லை, எனக்கு அம்மா என்ற ஒருவர் இருக்கிறார். ஒரு நபருக்கு ஒரு அம்மா தான் இருக்க முடியும். எனவே நான் அவரை மட்டுமே அம்மா என்று கூப்பிட முடியும்.

ராதிகாவை நான் அம்மா என்று கூப்பிடவில்லை என்றாலும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் எனது தந்தையின் இரண்டாவது மனைவி என்ற வகையில் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இருவரும் நல்ல உறவில் தான் தற்போது உள்ளோம். அதேபோல் எனது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் என்னை பொருத்தவரை அவர் ஒரு நல்ல அப்பா. அவரை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது.

மேலும் இது குறித்து கேள்வி எழுப்பவர்கள் குறித்து எனக்கு கவலை இல்லை. அவர்களுடைய வேலையே குலைத்துக் கொண்டே இருப்பதுதான். அவர்களுக்கு வேற வேலை இல்லை என்பதால் அதையே பேசி வருகிறார்கள். அவர்களுக்கு உண்மையில் வேலை இருந்தால் ஏன் இதைப் பற்றி எல்லாம் பேசப்போகிறார்கள்’ என்று வரலட்சுமி ஆவேசமாக கூறினார்.வரலட்சுமி இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.