close
Choose your channels

எம்ஜிஆர் முதல் உதயநிதி வரை 500 படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

Friday, April 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவாஜிகணேசன் முதல் உதயநிதி வரை பல பிரபலங்களின் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் ரங்கம்மாள் பாட்டி. கோவையை சேர்ந்த இவர் எம்ஜிஆர் நடித்த ’விவசாயி’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1967ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜீத், விஜய் , விஷால், உதயநிதி என பல நடிகர்களுடன் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல் நலம் காரணமாகவும் வயது முதிர்வாலும் சிகிச்சை பெற்று வந்த ரங்கம்மாள் பாட்டி இன்று காலமானார். அவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான தெலுங்குபாளையத்தில் நடக்கும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

40 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடித்து போதிலும் அவர் கடைசியில் ஒரு கூரை வீட்டில் தான் தங்கி இருந்தார் என்றும், அவரை அவரது சகோதரி மற்றும் அவரது மகன் இறுதிக்காலத்தில் கவனித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.