close
Choose your channels

ராதாரவி மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டை வைத்த விக்னேஷ் சிவன்!

Monday, March 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு நேற்று விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது அவர் மீது ஒரு கடுமையான பாலியல் குற்றச்சாட்டையும் சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

கடந்த 2018ஆம் ஆண்டு அடையாளம் தெரியப்படுத்த அச்சப்பட்ட ஒரு நடிகை ராதாரவி மீது பாலியல் புகார் ஒன்றை அளித்தார். அவர் தன்னுடைய பெயரை கூட முன்னிலைப்படுத்த முடியாத நிலையில், ராதாரவியோ சுதந்திரமாக நடமாடி வருகிறார். மேலும் மீடூ இயக்கத்தையும் அவர் உள்நோக்கத்துடன் இழிவான முறையில் கிண்டல் செய்தார்.

அதேபோல் கடந்த 2017அம் ஆண்டில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில் கருத்துகளை தெரிவித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வரும் ராதாரவி போன்ற ஆண்கள் புனிதப்படுத்துகிறார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி. ஆகிய மரியாதைக்குரிய தலைவர்கள் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துக்கு எதிராக கடுமையாகக் குரல் கொடுத்தார்கள். ஆண் இனவாதம் பிடித்த, பெண்களுக்கு எதிராக செயல்படும் ராதாரவிக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை ஏன் எடுக்கக்கூடாத? தயவுகூர்ந்து இதை கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இன்று ராதாரவி, திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.