close
Choose your channels

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்?

Saturday, September 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் உள்பட 20 மாவட்ட நிர்வாகிகளை நேற்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் சந்தித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த சந்திப்பின்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும், ஆலோசனையின் முடிவில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் உள்பட ஒரு சில தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாக போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos