close
Choose your channels

விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்: பூ தொழிலாளர்கள் போராட்டம்

Monday, October 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களாக விஜய் படம் பிரச்சனை இன்றி வெளியானதாக சரித்திரம் இல்லை. அந்த வகையில் 'பிகில்' திரைப்படமும் ஆரம்பித்ததில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன

குறிப்பாக 'பிகில்' படத்தின் ஆடியோ விழாவிற்கு பின் வரிசையாக பல்வேறு பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றது. பிகில் படத்தின் கதை தன்னுடையது என செல்வா என்பவர் வழக்கு தொடுத்திருக்கும் நிலையில், இறைச்சி வியாபார சங்கத்தினர், 'பிகில்' படத்தின் பர்ஸ்ட்லுக் குறித்த பிரச்சனையை எடுத்தனர்.

இந்த நிலையில் தற்போது பூ தொழிலாளர்கள் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். பிகில் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் கூறிய ஒரு குட்டிக் கதையில் பூ தொழிலாளியை அவமதிக்கும் வகையில் விஜய் பேசியதாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்ப தொழிலாளர்கள் சங்க செயலாளர் படையப்பா ரெங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

பிகில் ஆடியோ விழா நடைபெற்று பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது திடீரென பூ தொழிலாளர்களுக்கு ஞானோதயம் வந்தது எப்படி? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.