close
Choose your channels

உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்தினர் இருவர் போட்டியின்றி தேர்வு!

Thursday, September 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவி, பஞ்சாயத்து தலைவர் பதவி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவி உள்ளிட்ட 16 இடங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று நடந்து வரும் நெல்லை மாவட்டம் சிறுவனஞ்சி கிராமம் 5வது வார்டில் வேட்புமனுத் தாக்கல் செய்த விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ராஜகுமாரி என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் திங்கள் அன்று வெளியிடப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தென்காசி மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.