close
Choose your channels

தமிழ் இயக்குனரின் அடுத்த படத்திற்காக இணையும் திருமாவளவன் - விஜய்சேதுபதி!

Monday, February 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘தெருநாய்கள்’, 2018ஆம் ஆண்டு வெளியான ‘படித்தவுடன் கிழித்து விடவும், மற்றும் 2020ஆம் ஆண்டு வெளியான ‘கல்தா’ ஆகிய படங்களை இயக்கியவர் ஹரி உத்ரா. இவர் தற்போது அடுத்த படத்தின் பணியை சமீபத்தில் தொடங்கியுள்ளார். இயக்குனர் ஹரி உத்ராவின் அடுத்த படத்தை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி உள்பட 4 பேர் புரமோஷன் செய்கின்றனர்.

இயக்குனர் ஹரி உத்ராவின் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாகவும், இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் கதிர் மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஆகிய நால்வரும் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

அலி மிர்ஸாக் இசையில் வினோத் ராஜா ஒளிப்பதிவில் கணேஷ் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ஐ புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.