close
Choose your channels

விஜய்சேதுபதி அளித்த ரூ.1 கோடி நிதியுதவி: திரையுலகினர் இன்ப அதிர்ச்சி!

Saturday, October 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெப்ஸி தொழிலாளர்களுக்கான ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்ததை அடுத்து திரையுலகினர் இன்ப அதிர்ச்சி அடைந்து விஜய்சேதுபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்

நடிகர் விஜய் சேதுபதி தற்போது சினிமாவில் பிசியான நடிகராக இருந்தாலும் அவ்வப்போது பொதுமக்கள் மற்றும் திரையுலகினருக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாரதி என்ற சிறுமிக்கு ரூபாய் 20 லட்ச ரூபாய் நிதியுதவி கொடுத்தார் என்ற செய்தியைப் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டும் திட்டத்திற்கு நடிகர் விஜய்சேதுபதி ரூபாய் ஒரு கோடி நிதி உதவி வழங்கி உள்ளார். இதனை அடுத்து பெப்சி தொழிலாளர்கள் சார்பில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.