close
Choose your channels

சிரஞ்சீவியின் காலில் திடீரென விழுந்த விஜய்சேதுபதி! ஏன் தெரியுமா?

Monday, September 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் இணைந்து நடித்த திரைப்படம் 'சயிரா நரசிம்மரெட்டி. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி, வரும் அக்டோபர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் இந்த படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் சிரஞ்சீவி, விஜய்சேதுபதி உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிரஞ்சீவி பேசியபோது விஜய்சேதுபதியை வெகுவாகப் புகழ்ந்து கூறினார். விஜய்சேதுபதி பிஸியான நிலையிலும், தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வந்தாலும் கூட, இந்த படத்திற்காக அவர் கடினமாக உழைத்தார் என்றும், அவர் தன்னிடம் மிகுந்த பாசம் வைத்துள்ளார் என்றும், தன்னை 'அண்ணா அண்ணா' என்று மட்டுமே கூப்பிடுவார் என்றும், இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்

தன்னை புகழ்ந்து கொண்டே வந்த சிரஞ்சீவியை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த விஜய்சேதுபதி, திடீரென சிரஞ்சீவி அருகில் சென்று அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். விஜய்சேதுபதி திடீரென தன் காலில் விழுவதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சிரஞ்சீவி அவரை தூக்கி வாழ்த்தினார். சிரஞ்சீவியின் காலில் விழுந்தது விஜய்சேதுபதி விழுந்து ஆசி பெற்றது ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டாலும் சிரஞ்சீவி ஒரு குரு போன்றவர் என்றும் அவரது காலில் விஜய் சேதுபதி விழுந்து ஆசி பெற்றது ஒரு சிஷ்யனின் உணர்வில் என்றும் இன்னொரு பக்கம் பேசப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.