close
Choose your channels

கொரோனா பரபரப்பிலும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: 3 பேர் கைது

Thursday, April 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கொரோனா வைரசால் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே கொரோனவுக்கு எதிராக மீம்ஸ்களும், கொண்டாட்டங்களும் நடந்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. சமூக விலகலை கூட பொருட்படுத்தாமல் ஒரு சிலர் செய்து வரும் காரியத்தால் கொரோனா மிக தீவிரமாக பரவும் அபாயம் இருப்பதை இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் இந்த கொரோனா பரபரப்பிலும் நடுரோட்டில் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் வீரபாண்டி என்ற கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞருக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்துள்ளது. இதனை வித்தியாசமாக கொண்டாட நினைத்த அவருடைய நண்பர்கள் ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாமல் சமூக விலகலையும் மதிக்காமல் சாலையின் நடுவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த வீடியோவை பார்த்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மற்றும் அவருடைய நண்பர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கொரோனா பரபரப்பிலும் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் பொறுப்பின்மையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos