close
Choose your channels

வரலட்சுமியின் 'சேவ் சக்தி' திட்டத்திற்கு விஷால் உள்பட நடிகர் நடிகையர் ஆதரவு

Wednesday, March 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பாவனாவுக்கு நேர்ந்த பாலியல் சம்பவத்திற்கு பின்னர் பெண் கலைஞர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகை வரலட்சுமி ஆரம்பித்த அமைப்புதான் 'சேவ் சக்தி. பெண்களுக்கான சட்டதிட்டங்களை அதிகரித்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம் வேண்டும் என்றும், பெண்களுக்கு எதிரான வழக்கில் குறிப்பிட்ட தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகள் இந்த அமைப்பின் மூலம் வலியுறுத்தப்படும் என்று சமீபத்தில் வரலட்சுமி கூறினார்.
இந்நிலையில் இதற்கான கையெழுத்து இயக்கம் ஒன்றை 'உலக மகளிர் தினமான இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் என்றும் இதில் அனைவரும் குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டு செல்லுமாறு வரலட்சுமி கேட்டுக்கொண்டிருந்தார்.
வரலட்சுமியின் வேண்டுகோளை ஏற்று இந்த கையெழுத்து இயக்கத்திற்கு கோலிவுட் திரையுலகினர் பெருமளவு ஆதரவு தந்துள்ளனர். ஜெயம் ரவி, விஷால், பிரசன்னா, நடிகைகள் தன்ஷிகா, சினேகா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்த கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கையெழுத்தை பதிவு செய்து ஆதரவு தெரிவித்தனர்.
நடிகர், நடிகையர் மட்டுமின்றி பொதுமக்களும் ஏராளமானோர் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். தான் எதிர்பார்த்ததைவிட அதிக ஆதரவு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர்களிடம் இருந்து கிடைத்துள்ளதாக வரலட்சுமி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.