close
Choose your channels

சூப்பர் ஸ்டாரை அடுத்து உலக நாயகனிடம் ஆதரவு கேட்ட விஷால் அணி

Monday, August 17, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சரத்குமார், விஷால் ஆகிய இரு தரப்பினர்களும் மும்முரமாக வாக்குகளை சேகரித்து வரும் நிலையில் சற்று முன் விஷால் அணியினர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை சந்தித்து தனது அணிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டதாக வந்த செய்தியினை பார்த்தோம். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து விஷால் குழுவினர் உலக நாயகன் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.


தமிழ் திரையுலகின் இரண்டு பெரிய நடிகர்களையும் ஒரே நாளில் விஷால் அணியினர் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது விஷாலுடன் நாசர், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன், குஷ்பு ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாயகனுக்கு மரியாதை நிமித்தமாக பூங்கொத்தை விஷால் அணியினர் கொடுத்து அவரது ஆதரவை தங்கள் அணிக்கு வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

விஷால் அணியினரின் இந்த நடவடிக்கை காரணமாக நடிகர் சங்க தேர்தல் பணிகள் விறுவிறுப்பாகிவிட்டதாகவே கருதப்படுகிறது. மேலும் நேற்று கோவில் திருவிழா ஒன்றில் கலந்து கொண்ட விஷால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டுள்ளதாகவும், அப்பாயின்மெண்ட் கிடைத்தவுடன் அவரை தேர்தலில் வாக்களிக்க வேண்டுகோள் விடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் நடிகர் சங்க வாக்காளர் பட்டியலில் மூத்த கலைஞர் கருணாநிதியின் பெயர் இல்லாதது வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.