close
Choose your channels

மீண்டும் திடுக் திருப்பம்: விஷால் வேட்புமனு மீண்டும் நிராகரிப்பு

Wednesday, December 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி முதலில் நிராகரித்தனர். பின்னர் விஷால் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்த பின்னர் அவரது வேட்புமனு ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென ஒருசில மணி நேரம் கழித்து மீண்டும் விஷாலின்  வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஷால் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு குறித்து தேர்தல் அதிகாரி விளக்கமளிக்கையில் ''விஷாலை முன்மொழிந்த 10 பேர்களில் தீபன் மற்றும் சுமதி ஆகிய இரண்டு பேர் நாங்கள் விஷாலை முன்மொழியவில்லை என்று கூறியுள்ளனர். தேர்தல் ஆணைய விதிகள்படி சுயேட்சை வேட்பாளரை அந்த தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். ஆனால் விஷாலை 8 பேர் மட்டுமே முன்மொழிந்ததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

விஷாலின் வேட்புமனு விவகாரம் ஒரு த்ரில் சினிமாவை போல திடீர் திடீரென திருப்பங்கள் நிறைந்ததாக இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.