நடிகர் சங்க தேர்தல்: விஷால் விடுத்த முக்கிய வேண்டுகோள்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது நடிகர் சங்கம் தேர்தலை முன்னிட்டு வரும் 23ம் தேதி திரைத்துறைக்கு விடுமுறை அளிக்க நடிகர் சங்க செயலாளர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ஆகியோர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019-2022ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை சென்னை ராஜா அண்ணாமலைபுரம், சத்யா ஸ்டுடியோ டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. அன்றைய தினத்தில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினராக உள்ள அனைத்து திரைப்பட நடிகர்/நடிகையர்கள் நேரில் வந்து தங்கல் வாக்கினை பதிவு செய்ய உள்ளனர்.

மேலும் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் உறுப்பினராக உள்ள பலர் தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளனர். எனவே அவர்களும் தங்கள் வக்கினை பதிவு செய்வதற்கு தேர்தல் தேதியன்று விடுமுறை அளித்து எங்களது சங்கத்தின் தேர்தலை நடத்த ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

More News

'தடம்' பார்த்து நடிகைக்கு வாய்ப்பு கொடுத்த சசிகுமார் பட இயக்குனர்!

அருண்விஜய் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வெற்றிப்படம் 'தடம்'. இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்திருந்த நடிகை வித்யாவுக்கு

அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய பிரபல தயாரிப்பாளர்!

சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', ஜீவா நடித்த 'கீ', 'ஜெயம் ரவி நடித்த 'மிருதன்' உள்பட பல தமிழ்த்திரைப்படங்களை தயாரித்தவர் பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். 

'நம்ம டீம் இந்தியா': உலகக்கோப்பைக்காக ஜிவி பிரகாஷின் அசத்தல் பாடல்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி வரும் 5ஆம் தேதி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது

சிவகார்த்திகேயன் - 'அருவி' அருண்பிரபு படத்தின் குழுவினர் குறித்த தகவல்

நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான 'கனா' சூப்பர்ஹிட் ஆனதை அடுத்து அவர் தயாரித்த இரண்டாம் தயாரிப்பு திரைப்படமான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு'

தம்பியை தூக்கில் தொங்கவிட்ட தந்தை, மொபைல் போனில் படம்பிடித்த மகள்!

தன் உடம்பிறந்த தம்பியை தனது தந்தையே தூக்கில் தொங்கவிட்ட கொடூர காட்சியை அவரது மகள் மொபைல் போனில் வீடியோ எடுத்த சம்பவம் ஒன்று பெங்களூர் அருகே நடந்துள்ளது.