close
Choose your channels

சிவகார்த்திகேயன் - 'அருவி' அருண்பிரபு படத்தின் குழுவினர் குறித்த தகவல்

Monday, June 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான 'கனா' சூப்பர்ஹிட் ஆனதை அடுத்து அவர் தயாரித்த இரண்டாம் தயாரிப்பு திரைப்படமான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தனது மூன்றாவது தயாரிப்பு குறித்த அறிவித்த சிவகார்த்திகேயன், இந்த படத்தை 'அருவி' இயக்குனர் அருண்பிரபு இயக்குவார் என்று கூறினார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனும் அருண்பிரபுவும் இணையும் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கவுள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஷெல்லி ஒளிப்பதிவும், ரெய்மண்ட் கிராஸ்டா படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர். இவர்கள் இருவரும் அருண்பிரபுவின் 'அருவி' படத்தில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயனும், வசனகர்த்தாவாக குட்டிரேவதியும் பணிபுரியவுள்ளனர்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கி கூடிய விரைவில் படப்பிடிப்பும் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது. அருண்பிரபுவின் இந்த படமும் 'அருவி' போல் வெற்றியடைய நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.