close
Choose your channels

'தடம்' பார்த்து நடிகைக்கு வாய்ப்பு கொடுத்த சசிகுமார் பட இயக்குனர்!

Tuesday, June 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண்விஜய் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வெற்றிப்படம் 'தடம்'. இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்திருந்த நடிகை வித்யா பிரதீப்புவுக்கு தற்போது சசிகுமார் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

சசிகுமார் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ள இயக்குனர் கிருஷ்ணகுமார், இந்த படத்தில் நெகட்டிவ் ரோல் ஒன்றுக்காக நடிகையை தேடி வந்தார். அப்போது 'தடம்' படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த கோபிநாத், அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்த வித்யா பிரதீப்பை பரிந்துரை செய்தார். அதன்பின்னர் 'தடம்' படத்தை பார்த்த இயக்குனர் கிருஷ்ணகுமார், தனது படத்திற்கு வித்யா பிரதீப் பொருத்தமாக இருப்பார் என கருதி அவரையே ஒப்பந்தம் செய்தார்.

சசிகுமார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு குறித்து வித்யாபிரதீப் கூறியபோது, 'இதுவரை நான் நடிக்காத கேரக்டர். நெகட்டிவ் வேடமாக இருந்தாலும் எனது கேரக்டர் சுவாரஸ்யமானது. வழக்கமான நடிப்பில் இருந்து வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு. இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளர் கோபிநாத் அவர்களுக்கும் எனது நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மானஸா நாயகியக நடிக்கின்றார் என்பதும் மேலும் இந்த படத்தில் 'ஜோக்கர்' புகழ் குருசோமசுந்தரம், அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடக்களில் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.