close
Choose your channels

சூரி நில மோசடி விவகாரம்: விஷ்ணுவிஷால் தந்தையின் அதிரடி நடவடிக்கை!

Friday, October 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூரி, பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது நில மோசடி புகார் கொடுத்த தகவலை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷ்ணு விஷாலின் தந்தை முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகர் விஷ்ணு விஷால் தந்தை தயாரித்து நடித்த ’வீர தீர சூரன்’ என்ற திரைப் படத்தில் நடிப்பதற்காக சூரி ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும், அவருக்கு 40 லட்சம் சம்பளத்துக்கு பதிலாக சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாகவும் அதற்காக கூடுதலாக சூரி 2 கோடியே 70 லட்சம் தரவேண்டும் என்றும் விஷ்ணு விஷாலின் தந்தை கூறியதாக தெரிகிறது

இதனடிப்படையில் சூரி ரூபாய் 2 கோடியே 70 லட்சம் விஷ்ணுவிஷாலின் தந்தையிடம் கொடுத்ததாகவும், ஆனால் சம்பளமும் தராமல் நிலத்தையும் வாங்கித் தராமல் விஷ்ணுவிஷாலின் தந்தை இழுத்தடித்ததாகவும் போலீசில் சூரி புகார் செய்தார். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தான் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதி விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.