close
Choose your channels

ரிலீசுக்கு முன்பே லாபத்தை நோக்கி செல்லும் 'எஃப்.ஐ.ஆர்': ஆச்சரியமான தகவல்

Tuesday, February 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்வதால் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படத்தின் இயக்குனர் மனுஆனந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரிலீஸுக்கு முன்னரே ‘எஃப்.ஐ.ஆர்’ படம் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார். பிரபல இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவியாளராக இருந்து ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் மனு ஆனந்த், அந்த பேட்டியில் மேலும் கூறியபோது, ‘எனது தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் கொடுத்த சுதந்திரம் காரணமாகவே நான் இந்த படத்தில் முழு ஈடுபாட்டுடன் பணி செய்ய முடிந்தது என்றும் தற்போது இந்த படத்தின் திரையரங்கு ரிலீஸ் உரிமை வியாபாரம் இல்லாமல் 22 கோடி இதுவரை வியாபாரம் ஆகி உள்ளது என்றும் இது இந்த இந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிகம் என்பதால் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் வியாபாரம் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.



இன்னும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்கு உரிமைகளில் கிடைக்கும் வசூல் மொத்தமும் லாபம் என்பதால் ’ராட்சசன்’ படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலின் மிகப்பெரிய வெற்றி படமாக ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படம் இருக்கும் என கருதப்படுகிறது.

விஷ்ணுவிஷால், கவுதம் மேனன், ரெபா மோனிகா ஜான், பார்வதி, மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு அஸ்வதி இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.