close
Choose your channels

மனைவியிடம் மறைத்த விஷ்ணு விஷால்!

Wednesday, December 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவாகிய விஷ்ணு விஷால் தனது மனைவியிடம் முக்கிய விஷயத்தை மறைத்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2020 ஆம் ஆண்டு பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ’எஃப்ஐஆர்’ ’இன்று நேற்று நாளை’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றாகிய ’எஃப்ஐஆர்’ அப்டேட் நாளை வெளிவரும் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த ட்வீட்டை பார்த்த விஷ்ணு விஷாலின் மனைவி ஜூவாலா கட்டா, ‘என்னது எனக்கு கூட தெரியவில்லையே? என கமெண்ட் செய்துள்ளார். இதனையடுத்து ’எஃப்ஐஆர்’ படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என்ற தகவலை விஷ்ணு விஷால் தனது மனைவியுடன் கூடக் கூறாமல் மறைத்து விட்டது தெரிய வருகிறது.

விஷ்ணு விஷால், கௌதம் மேனன், பிரபா மோனிகா, மஞ்சிமா மோகன், கவுரவ் நாராயணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை மனு ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். அஸ்வத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் விஷ்ணு விஷாலுக்கு திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.