close
Choose your channels

வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளது...! சத்யபிரதா சாகு....!

Monday, April 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல்-6-ம் தேதி வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்த நிலையில், அரசியல் தலைவர்கள் ரிசல்ட்டுக்காக ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். வாக்குகள் பதிவான இயந்திரங்கள், சுமார் 75 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் கால்குலேட்டர்கள் போல தான் செயல்படுகின்றன. அதனை பிறரால் இயக்கவும், ஹேக் செய்யவும் முடியாது என்றும் கூறியுள்ளார்.

மே-2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று மாலை தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,
"வாக்கு இயந்திரங்கள், அந்தந்த மையங்களில் பலத்த பாதுகாப்புடன் இருக்கிறது. எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. வாக்கு எண்ணிக்கைக்காக பலத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மே -2இல் வாக்கு எண்ணிக்கை நடக்கின்ற நிலையில், முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும்.

சிறிய தொகுதிகளுக்கு 14 மேஜைகள், பெரிய தொகுதிகளுக்கு 30 மேஜைகள் என்பதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேஜைகள் போடப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.