close
Choose your channels

சமந்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய திருமண ரத்து செய்தி?

Wednesday, February 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை சமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்பதும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் நாகசைதன்யாவின் சகோதரர் அகில் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயா பூபாலல் ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. சமந்தா-நாகசைதன்யா திருமணத்திற்கு முன்னரே இவர்களது திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு அழைப்பிதழ் விநியோகமும் முடிந்துவிட்டது.

இந்நிலையில் திருமண வீட்டார் திடீரென அகில் திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என்றூ அவசர தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், திருமண அழைப்பிதழ் பெற்றவர்கள் தங்களது பயணத்தை ரத்து செய்யும்படியும் இருவீட்டார் சார்பில் கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

திருமண வீட்டார்கள் இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பதால் இந்த திருமணம் நிறுத்தப்பட்டதா? அல்லது ஒத்தி வைக்கப்பட்டதா? என்பது குறித்த குழப்பம் நிலவுகிறது. இந்த திருமண நிறுத்தம் நிச்சயம் சமந்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.