close
Choose your channels

என்னை மகிழ்விக்க நானே போதும், ஆண் துணை தேவையில்லை: அஜித், விஜய் பட நடிகை

Sunday, November 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் நடித்த நடிகை என்னை மகிழ்வித்து கொள்ள நானே போதும் என்றும் எனக்கு ஆண் துணை தேவை இல்லை என்றும் வீடியோ ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சியான் விக்ரம் நடித்த ’ஜெமினி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். இவர் அதன்பிறகு அஜித் நடித்த ’வில்லன்’ விஜய் நடித்த ‘திருமலை’, கமல்ஹாசன் நடித்த ’அன்பே சிவம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான கிளாமர் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் தனக்கென ஒரு இணையதளத்தைத் தொடங்கி அதில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ‘என்னை மகிழ்வித்து கொள்ள நானே இருக்கும் நிலையில் எனக்கு ஏன் இன்னொரு ஆண் தேவை? எனக்கு எந்த ஆணுடைய தேவையும் இல்லை’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோவுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை கிரண் கடந்த 2013ஆம் ஆண்டு ராம்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு அதன் பிறகு அவரை பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.