close
Choose your channels

உலகில் எதுவும் இலவசம் இல்லை, டுவிட்டருக்கு கட்டணம் வசூலிப்பது சரிதான்: பிரபல நடிகை

Sunday, November 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டுவிட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என அந்நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய எலான் மஸ்க் அறிவித்த நிலையில் எதுவுமே உலகில் இலவசம் இல்லை என்றும் டுவிட்டர் கட்டணம் வசூலிப்பது சரியானதுதான் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் அவர்கள் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கினார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உடன் முக்கிய நிர்வாகிகளை நீக்கியதோடு 50 சதவீத பணியாளர்களையும் நீக்க திட்டமிட்டு உள்ளார் என்றும் அது மட்டுமின்றி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க போகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் டுவிட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதம் 8 டாலர் பணம் செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் கூறியது ட்விட்டர் பயனாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது இந்த அறிவிப்புக்கு டுவிட்டரில் புளூடிக் வைத்திருக்கும் பயனாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழில் ’தலைவி’ என்ற திரைப்படத்திலும் பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்த நடிகை கங்கனா ரனவத் எலான் மஸ்க்கின் முடிவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். டுவிட்டர் மிகச் சிறந்த சமூக வலைத்தளமாக திகழ்கிறது என்றும் இந்த உலகில் எதுவுமே இலவசம் இல்லை என்றும் ஆகவே டுவிட்டருக்கு கட்டணம் வசூலிப்பதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் டுவிட்டர் புளூடிக் வசதி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் கணக்கு கடந்த ஆண்டு நிரந்தரமாக மூடப்பட்டதை அடுத்து அவருடைய கணக்கு மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.