close
Choose your channels

படப்பிடிப்பின்போது மகேஷ்பாபுவை அடித்த கீர்த்தி சுரேஷ்: அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

Tuesday, May 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

படப்பிடிப்பின்போது மகேஷ்பாபுவை தெரியாமல் கீர்த்தி சுரேஷ் அடித்து விட்டதாகவும் அதன் பிறகு அவர் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த ’சர்காரு வாரி பாட்டா’ என்ற தெலுங்கு திரைப்படம் வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் டிரைலர் ரிலீசுக்கு பிறகு இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறிய போது, ‘ஒரு நாள் படப்பிடிப்பின்போது மகேஷ்பாபுவின் முகத்தில் தவறுதலாக அடித்து விட்டேன். இதனை அடுத்து உடனடியாக அவரிடம் நான் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் பெருந்தன்மையாக ’அதனால் ஒன்றுமில்லை கவலைப்பட வேண்டாம்’ என்று கூறினார். இருப்பினும் நான் திரும்பத் திரும்ப அவரிடம் மன்னிப்பு கேட்டேன். இதை அவர் லேசான விஷயங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்டது எனக்கு நிம்மதியை தந்தது’ என்று கூறியுள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.