close
Choose your channels

நயன்தாரா திருமணம் திருப்பதியில் இருந்து மகாபலிபுரத்திற்கு மாறியது ஏன்?

Saturday, May 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திடீரென இந்த திருமணம் மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்காக திருப்பதி தேவஸ்தானத்திடம் அனுமதி வாங்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் உறவினர்கள் 150 பேர் வருவார்கள் என்று தேவஸ்தானம் கூறியபோது அத்தனை பேர்களை அனுமதிக்க தேவஸ்தானம் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து திருப்பதியிலிருந்து மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் திருமணத்தை நடத்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தாலும் சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நடைபெறும் என்றும் அதற்கு திரை உலக பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.