close
Choose your channels

சமையல் செய்யாத மனைவியை தட்டிக்கேட்ட கணவருக்கு கரண்டி அடி!

Thursday, May 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வீட்டில் சமையல் செய்யாமல் சித்தி வீட்டுக்கு சென்ற மனைவியை தட்டி கேட்ட கணவரை மனைவியும் அவரது சித்தியும் சேர்ந்து தாக்கியதால் கணவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த கார்த்தி் என்பவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவரது மனைவி தனலட்சுமி சமையல் செய்யாமல் சித்தி வீட்டுக்கு சென்றிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து சமையல் செய்யாமல் சித்தி வீட்டுக்கு ஏன் சென்றாய் என மனைவியை கார்த்தி் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தனலட்சுமி தனது சித்தியை அழைத்து இருவரும் சேர்ந்து கார்த்திக்கை சரமாரியாக கரண்டியால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த கார்த்தி் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெற்றியில் 4 தையல்கள் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.