close
Choose your channels

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்: கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவி

Wednesday, March 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை, மனைவியும் அவருடைய கள்ளக்காதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் விழுப்புரம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் அருகே கண்டமானடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் லதா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ராஜ்குமார் தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் ராஜ்குமாரின் கழுத்தில் காயம் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததால் அவரது மனைவி லதாவை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். அப்போது அவர் தனக்கும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருப்பதாகவும் இந்த கள்ளக்காதலை தனது கணவர் கண்டித்ததாகவும், இதனால் தனது காதலுக்கு தடையாக இருந்த கணவனை தானும் தனது கள்ளக்காதலனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாகவும் வாக்குமூலம் கூறினார்.

இதனை அடுத்து லதாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அவரது கள்ளக்காதலனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக உள்ளனர். கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ்வதற்காக கணவனையே கழுத்தை நெறித்து கொலை செய்த மனைவியால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.