close
Choose your channels

ஓடும் காரில் பிறந்த குழந்தைக்கு 5 வருட இலவச பயண சலுகை

Friday, October 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் கேப் நிறுவனத்தின் கார் ஒன்றில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென பிரசவ வலி வந்து காரிலேயே குழந்தை பிறந்ததால், தாய் மற்றும் குழந்தை என இருவருக்கும் ஐந்து வருட இலவச பயணம் செய்ய அந்நிறுவனம் சலுகை வழங்கியுள்ளது.

புனேவை சேர்ந்த ஈஸ்வரி சிங் என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு அக்டோபர் 24ஆம் தேதி குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதியே திடீரென ஈஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக ஈஸ்வரியின் கணவர் தனியார் நிறுவனத்தின் கேப் ஒன்றில் கார் புக் செய்தார். 

காரில் ஈஸ்வரி மற்றும் அவருடைய உறவினர்கள் செல்ல, ஈஸ்வரியின் கணவர் பைக்கில் சென்றார். இந்த நிலையில் ஐந்து நிமிட பயணத்திற்கு பின் காரிலேயே ஈஸ்வரிக்கு குழந்தை பிறந்தது. இதன்பின்னர் கார் மருத்துவமனைக்கு சென்று, ஈஸ்வரிக்கும் அவருடைய குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

இந்த நிலையில் தங்களது நிறுவனத்தின் காரில் பிறந்த குழந்தைக்கும், தாய்க்கும் ஐந்து வருட இலவச பயணம் செய்யும் கூப்பன் வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. குழந்தைக்கு பெயர் வைத்தவுடன் பெயருடன் கூடிய சலுகை கூப்பன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பயணத்தின் போது காரை ஓட்டிய டிரைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.