close
Choose your channels

அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸ் ஆகும் யாஷிகாவின் இரண்டு படங்கள்!

Friday, June 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் யாஷிகா ஆனந்த் கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் நடித்த பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது அவர் குணமாகி மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அவர் நடித்த இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் ரிலீசாக உள்ளன

எஸ்.ஜே. சூர்யாவுடன் யாஷிகா ஆனந்த் நடித்த ’கடமையை செய்’ என்ற திரைப்படம் ஜூன் 24ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேபோல் யாஷிகா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடித்த ‘பெஸ்ட்டி’ என்ற திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாஷிகா நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளதை அடுத்து அவர் நடித்து ரிலீஸ் ஆகாமல் இருக்கும் மற்ற படங்களும் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நடிகை யாஷிகா தற்போது ’இவன் தான் உத்தமன்’, ‘ராஜபீமா’, ‘பாம்பாட்டம்’, ‘சல்பர்’, ‘பாகீரா’, ‘சிறுத்தை சிவா’, ‘தி லெஜண்ட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.