close
Choose your channels

கொரோனா முகாமில் இருந்து தப்பி காதலியை சந்தித்த இளைஞர்!

Thursday, March 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரசை இந்தியாவில் இருந்து விரட்ட இந்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு சீரிய முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசிலரும், பொதுமக்களில் ஒரு சிலரும் பொறுப்பின்றி இருப்பதால் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக அறிகுறி இருப்பவர்கள் கொரோனா முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த சிகிச்சையை ஏதோ சிறைவாசம் என எண்ணிக்கொண்டு ஒரு சிலர் கொரோனா முகாமில் இருந்து தப்பிக்க முயற்சித்து வரும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் மதுரையில் கொரோனா முகாமில் இருந்து தப்பிச் சென்ற இளைஞர் ஒருவரை போலீசார் கடந்த சில நாட்களாக தேடி வந்தனர். இதனை அடுத்து கொரோனா முகாமில் இருந்து தப்பிய அந்த இளைஞர் தனது காதலியை சந்தித்து விட்டு மீண்டும் கொரோனா முகாமுக்கு திரும்பி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் முகாமில் இருக்கும் அந்த இளைஞர் தப்பிச் சென்றதால் அவரது காதலி உட்பட இன்னும் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்குமோ என்ற அச்சத்தில் மருத்துவர்கள் உள்ளனர். இதுபோன்று பொறுப்பில்லாமல் இருப்பவர்களால் தான் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக அந்த இளைஞரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos