மனைவியுடன் பேசிய நண்பனை கழுத்தறுத்து கொலை: சென்னை சம்பவத்தின் சிசிடிவி காட்சி!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தன்னுடைய மனைவியுடன் பேசிய ஒருவரை அவருடைய நண்பரே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்த சிசிடிவி காட்சியும் வைரலாகி வருகிறது
சென்னை புதுப்பேட்டை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் மீன்பாடி ஓட்டும் கூலி வேலை செய்து வருகிறார். மனைவி இறந்த நிலையில் ஒரே ஒரு மகனுடன் இவர் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று இரவு இவர் வேலையை முடித்துவிட்டு தன்னுடைய மீன்பாடி வண்டியிலேயே உறங்கிக் கொண்டிருந்தபோது அவருடைய நண்பர்களான இளவரசன் மற்றும் அருண்குமார் ஆகியோர் வந்தனர். இருவரும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது
இந்த நிலையில் திடீரென அருண்குமார், சந்தோஷிடம் தனது மனைவியுடன் நீ எப்படி பேசுவாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு இளவரசனும் சப்போர்ட் செய்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷ் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போது சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தார். இதனை அடுத்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய, காவல்துறையினர் தலைமறைவாக உள்ள இளவரசன் மற்றும் அருண்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்
இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.