close
Choose your channels

விஜய்மில்டனுக்கு சூர்யா செய்த உதவி

Saturday, March 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகிய விஜய் மில்டன், 'கோலி சோடா' என்ற படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குனர் என்பதையும் நிரூபித்தார். வெறும் ரூ.2 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் சென்னையில் மட்டுமே ரூ.3 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாகியது.
இந்நிலையில் விஜய் மில்டனின் அடுத்த படமான '10 எண்றதுக்குள்ள' திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனாலும் தற்போது அவர் இயக்கி முடித்துள்ள 'கடுகு' படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்.
விஜய்மில்டனின் முந்தைய படத்தின் தோல்வி காரணமாக விநியோகிஸ்தர்கள் 'கடுகு' படத்தை வாங்கி வெளியிட தயங்கிய நிலையில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது இந்த படத்தை வெளியிட முன்வந்துள்ளது. விஜய்மில்டன் தனது நீண்ட கால நண்பர் என்பதாலும், அவருடைய திறமையின் மீது நம்பிக்கை வைத்த சூர்யா இந்த படத்தை வெளியிட முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா, ஜோதிகா நடிக்காத படத்தை 2D நிறுவனம் வெளியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ராஜகுமாரன் புலி வேஷம் போடும் கலைஞராகவும், பரத் வில்லன் வேடத்திலும் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.