close
Choose your channels

ரஜினியின் அரசியல் பேச்சை கேட்டு கேட்டு போரடிக்கின்றது. பிரபல நடிகை

Saturday, May 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேச ஆரம்பித்து சுமார் 20 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. 1996ஆம் ஆண்டு திமுக-தமாக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியதில் இருந்தே அவரது மேடை பேச்சுகளிலும், திரைப்படங்களின் வசனங்களிலும் அரசியல் அவ்வப்போது கலந்து இருந்தது.

இந்த நிலையில் இந்த வாரம் ரசிகர்களின் சந்திப்பின்போதும் ரஜினியின் பேச்சில் அரசியல் காற்று சற்று பலமாக வீசியது. ஆனால் இந்த முறை அவரது பேச்சில் வீரியம் இருந்ததாகவும், எனவே இம்முறை அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் 'அரசியல் போர்' பேச்சு குறித்து பிரபல நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில்கூட டக்கென முடிவெடுக்கும் திறம் வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவரை... 'போர்' அப்பிடின்னு கேட்டு, போரடிக்குது...''கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த பதிவு ரஜினி ரசிகர்களிடம் கண்டனங்களை பெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாகவே நடிகை கஸ்தூரி அரசியல், சமூக பிரச்சனைகள் குறித்து தனது போல்டன கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.