close
Choose your channels

முருகதாஸ்-பிரியதர்ஷன் தேசிய விருது சர்ச்சை குறித்து கமல்ஹாசன்

Saturday, April 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 64வது தேசிய விருது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்தது. தேசிய விருது கொடுப்பதில் பாரபட்சம் பார்க்கப்படுவதாக பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூற அதற்கு பிரியதர்ஷன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மீண்டும் முருகதாஸ் தனது டுவிட்டரில் இது தன்னுடைய கருத்து மட்டுமல்ல என்றும் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கருத்து என்றும் வீணாக விவாதம் செய்வதை விட்டுவிட்டு உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இதுகுறித்து பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா கூறியபோது, 'விருதுகள் வழங்கப்படுவதில் இன்று நேற்றல்ல, பல காலமாக முறைகேடுகள் நடந்து வருவதாகவும், இதுவும் ஒருவகை ஊழல் என்றும் ஆனால் இந்த ஊழல் குறித்து யாரும் பெரிதாக பேசுவதில்லை' என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து உலகநாயகன் கமல்ஹாசனிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், '12 பேர் முடிவு செய்தது. அதில் நல்லதும் இருக்கலாம். கெட்டதும் இருக்கலாம்' என்று குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.