close
Choose your channels

ஆர்யாவை மீண்டும் துன்புறுத்த விரும்பவில்லை. பாலா

Tuesday, August 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பாலாவுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு தேசிய விருது வாங்கிக் கொடுத்த திரைப்படம் 'நான் கடவுள்'. ஆர்யா, பூஜா மற்றும் பலர் நடித்திருந்த இந்த படம் அகோரிகளின் வாழ்க்கை முறைகளை கொண்டது. இந்த படத்தில் அகோரியாக நடித்த ஆர்யா நீண்ட முடியும், தாடியும் வளர்த்து, கடுமையாக உழைத்ததாகவும், அவரை மிக அதிகமாக பாலா வேலை வாங்கியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த இயக்குனர் பாலாவிடம் 'நான் கடவுள்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாலா,
"நான் கடவுள்' படத்திற்காக ஆர்யாவை நான் அதிகம் துன்புறுத்திவிட்டேன். மீண்டும் அவரை துன்புறுத்த விரும்பவில்லை' என்று கூறினார். இதிலிருந்து பாலாவுக்கு 'நான் கடவுள்' படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியா இல்லை என தெரிய வந்துள்ளது.

பாலா தற்போது "தாரை தப்பட்டை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இளையராஜாவின் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.