close
Choose your channels

பாங்காக் வெடிகுண்டு சம்பவம். நூலிழையில் உயிர் பிழைத்த பிரபல நடிகை

Tuesday, August 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நேற்று இரவு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் உடல் சிதறி 27 பேர் பலியான செய்தி அனைவரையும் உலுக்கியுள்ள நிலையில், இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு வெகு அருகில்தான் நடிகை ஜெனிலியா இருந்ததாகவும் அதிர்ஷ்டவசமாக அவர் எவ்வித ஆபத்தும் இன்றி உயிர் பிழைத்தாகவும் தற்போது தகவல்கள் வந்துள்ளது.


ஜெனிலியா நீண்ட இடைவெளிக்கு பின்னர் விளம்பர படம் ஒன்றில் நடிக்க சமீபத்தில் தாய்லாந்து சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். பாங்காக் நகரில் நேற்று வெடிகுண்டு வெடித்த மால் கட்டிடத்தின் எதிரேதான் ஜெனிலியாவும், அவரது கணவர் ரித்தீஷ் தேஷ்முக் தங்கியிருந்தனர் என்றும், குண்டுவெடித்த சத்தமும், அதன்பின்னர் போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ்கள் வரும் சைரன் சப்தமும் தங்களுக்கு நன்றாக கேட்டதாக அவர்கள் தங்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜெனிலியா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு தன்னுடைய இரங்கலையும், குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.